உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் வீட்டில் விபசாரம்; பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2023-03-23 09:39 GMT   |   Update On 2023-03-23 09:39 GMT
  • ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று வாலிபர் புகார் கொடுத்தார்.
  • போலீசார் இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். விவசாயியான இவர் சம்பவத்தன்று மஞ்சனக்கொரையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ஒரு டீக்கடையில் டீ குடித்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், தான் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், தன்னிடம் அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் நீங்கள் ஜாலியாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியான விவசாயி, வாலிபரை போலீசில் சிக்க வைக்க நினைத்தார். அவரிடம், தன்னிடம் பணம் இல்லை என்றும், ஏ.டி.எம்.மிற்கு சென்று எடுத்து வருவதாக கூறி விட்டு, நேராக ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார், அவர் கூறிய இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 அழகிகள் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான கூடலூர் நந்தட்டியை சேர்ந்த முஸ்தபா(48), கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின் (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News