உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 461 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2022-09-20 09:41 GMT   |   Update On 2022-09-20 09:41 GMT
  • மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கினார்.
  • பயனாளிக்கு சுயதொழில் தொடங்க ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 461 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து பாபநாசம் வட்டம் மாலினி என்ற மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000- மதிப்பிலான காசோலையினையும், தாட்கோ திட்டத்தின் சார்பில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற பயனாளிக்கு சுயதொழில் தொடங்கிட ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனத்தினையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News