உள்ளூர் செய்திகள்
சுபத்திரா
பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயம்
- பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயமானார்.
- ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது.
கடலூார்:
சிதம்பரம் அருகே வையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்செந்தில்குமார். அவரது மகள் சுபத்திரா (வயது 21)இவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணிபுரித்து வருகிறார். பொங்கல் விடுமு றைக்காக மருங்கூரில் உள்ள பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை முதல் காணாமல் போனார்.
இது குறித்து முத்தாண்டிகுப்பம்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது. இதுபற்றி காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவ கல்லூரி பெண் ஊழியரை தேடி வருகின்றனர்.