உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

Published On 2022-11-29 07:45 GMT   |   Update On 2022-11-29 07:45 GMT
  • பண்ருட்டியில் தனியார் கம்பெனி ஊழியர் மாயமானார்.
  • இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

கடலூர்:

பண்ருட்டி அருகே எரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரதுமகன் வினோத்குமார் ( வயது30 ). இவர்புதுவைதிருவண்டார்கோவில் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. அவரதுசெல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை ரங்கநாதன்புதுப்பேட்டைபோலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன வாலிபரை தீவிரமாக தேடி வருகிறார்.

Tags:    

Similar News