உள்ளூர் செய்திகள்

கடலூரில் உரிமம் இன்றி இயங்கிய தனியார் பஸ்கள்: போலீசார் அபராதம் விதிப்பு

Published On 2023-10-31 07:18 GMT   |   Update On 2023-10-31 07:18 GMT
  • அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன.
  • ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு அறிவுறுத்தலின் பேரில் கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன. அதனை நிறுத்தி போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய போது, கடலூர் புதுநகர் பகுதியில் 7 தனியார் பஸ்கள் , ரெட்டிச்சாவடி பகுதியில் 8 தனியார் பஸ்கள் உரிமம் இல்லாமல் இயங்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் உரிமம் இல்லாத பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய பஸ்கள் உரமம் மற்றும் உரிய ஆவணத்துடன் சென்று வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News