உள்ளூர் செய்திகள்

பிரிண்டரை மங்கலம் ஊராட்சி மன்றத்தினர் தலைமையாசிரியரிடம் வழங்கிய காட்சி

மங்கலம் அரசு பெண்கள் பள்ளிக்கு பிரிண்டர்

Published On 2022-06-23 04:40 GMT   |   Update On 2022-06-23 04:40 GMT
  • சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • ரூ.15,000 மதிப்புள்ள பிரிண்டரை மங்கலம் ஊராட்சி மன்றத்தினர் தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சியில் அரசு பெண்கள்உயர்நிலைப்பள்ளி உள்ளது.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மங்கலம்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மங்கலம் அரசு பெண்கள்உயர்நிலைப்பள்ளிக்கு பிரிண்டர் வழங்கப்பட்டது. பள்ளிக்கு தேவையான ரூ.15,000 மதிப்புள்ள உபகரணத்தை (பிரிண்டர்) மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹா நசீர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லிஸியம்மாளிடம் வழங்கினர்.

அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர் .

Tags:    

Similar News