உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2023-07-28 14:44 IST   |   Update On 2023-07-28 14:44:00 IST
  • காது, மூக்கு, தொண்டை குறித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • முகாமில் 5 கர்ப்பிணி பெண்களுக்கு பெட்டகம் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவு றுத்தலி ன்படி கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை, ஸ்கேன்,பொது மருத்துவம், கண் மருத்து வம்,பல் மருத்துவம்,சித்த மருத்துவம்,யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை,தோல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் 1018 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன்,ஊராட்சி துணைத் தலைவர் பாலு, ஊராட்சி செயலர் சசிகுமார், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் 5 மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளும்,சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 5 கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News