உள்ளூர் செய்திகள்

சீர்காழி, பொறையாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-01-23 09:19 GMT   |   Update On 2023-01-23 09:19 GMT
  • சீர்காழி, பொறையாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

Tags:    

Similar News