உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் நாளை மின்தடை

Published On 2022-08-15 08:20 GMT   |   Update On 2022-08-15 08:20 GMT
பண்ருட்டியில் நாளை மின்தடை என்று மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

கடலூர்:

பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய ஊர்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News