உள்ளூர் செய்திகள்
- அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
கள்ளக்குறிச்சி:
அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ஓடியந்தல், கடம்பூர், ஏந்தல், சின்னகொள்ளியூர், பெரியகொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமந்தூர், அரும்பராம்பட்டு, கடுவனூர், வடபொன்பரப்பி, கரையாம்பாளையம், மரூர், பெரியபகண்டை, ரெட்டியார்பாளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்