உள்ளூர் செய்திகள்

பேரளம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-06-05 14:46 IST   |   Update On 2023-06-05 14:46:00 IST
  • அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • முகுந்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் பேரளம், அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 6-ந்தேதி (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினிே்யாகம் பெறும் பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், கொல்லாபுரம், பூந்தோட்டம், அதம்பார்,

விலாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காலியாக்குடி, திருக்கொட்டாரம், பாவட்டகுடி, கடகம், சிறுபுலியூர், முகுந்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை பேரளம் உதவி செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News