உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் நாளை மறுநாள் மின்தடை
மாதாந்திர பணி நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பொன்னகரம் , நல்லாம்பட்டி, ெரட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார் புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை,
என்.ஜி.ஓ காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்நகர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.