உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி திட்டங்கள் புகார் தொலைபேசி எண் குறித்த சுவரொட்டி-கலெக்டர் வெளியிட்டார்

Published On 2022-07-08 09:09 GMT   |   Update On 2022-07-08 09:09 GMT
  • பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேடு வழங்கப்பட்டது.
  • சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்ட கலெக்டரால், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான கையேடு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான புகார் தொலைபேசி எண் குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேட்டினை பயனாளிகளுக்கு வழங்கியும், ஊரக குடியிருப்பு திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 89254 22215 மற்றும் 89254 22216 ஆகிய தொலைபேசி எண் குறித்த சுவரொட்டியினை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.மேலும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News