நாங்குநேரியில் தாயை தாக்கிய மகனுக்கு வலைவீச்சு- செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்
- மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார்.
- ஆத்திரம் அடைந்த மணி, மீனாவை அவதூறாக பேசி தாக்கினார்.
களக்காடு:
நாங்குநேரி செல்வன் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி மீனா (வயது 46). இவர்களது மகன் கோகுல கண்ணன் என்ற பெட்ரோல் மணி. கூலி தொழிலாளியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் செலவுக்கு பணம் கேட்டு தாயாரிடம் தகராறு செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அதன் பின் அவர் ஜாமீனில் விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் அவர் வேலைக்கு செல்லாமல் தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த மணி, மீனாவிடம் வழக்கம் போல் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். மீனா பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த மணி அவரை அவதூறாக பேசி தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணியை தேடி வருகின்றனர்.