உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்.

கோவில்பட்டி டாஸ்மாக் பாரில் போலீசார் சோதனை

Published On 2022-07-31 09:08 GMT   |   Update On 2022-07-31 09:08 GMT
  • அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அந்த மதுபான கூடத்தில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

இதில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News