உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே பழங்கால சிலைகள் மீட்பு- 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-11-03 09:17 GMT   |   Update On 2022-11-03 09:17 GMT
  • நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்
  • நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது

நெல்லை:

நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்.

பழங்கால சிலைகள்

அப்போது நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடராஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 32). ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சிலைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது.

இதனை விற்பனை செய்த நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

அந்த சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. எனவே அவை வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News