உள்ளூர் செய்திகள்
தங்கும் விடுதி, கிராமங்களில் போலீசார் திடீர் சோதனை
- காலவாதியான விசாவுடன் சட்ட விரோதமாக இருக்கின்றனரா?
- மக்களிடம் இருந்து புகார்கள் போலீசாருக்கு வந்தது.
வடவள்ளி
கோவை புறநகர் பகுதிகளில் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக சில வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாக அப்பகுதி மக்களிடம் இருந்து புகார்கள் போலீசாருக்கு வந்தது.
அதன் பேரில் போலீசார் இன்று காலை ஆலாந்துறை, செம்மேடு, காருண்யா நகரில் உள்ள பழங்குடியின கிராமங்கள், அங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த பகுதிகளில் வெளிநாட்டவர்கள் யாராவது காலவாதியான விசாவுடன் சட்ட விரோதமாக இருக்கின்றனரா? என்பது குறித்தும் விசாரித்தனர்.