உள்ளூர் செய்திகள்
போக்சோ சட்டம் குறித்து டவுன் பள்ளி மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெல்லை:
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சந்திப்பு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் காவல் துறையினர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் (உதவி எண் :1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.