உள்ளூர் செய்திகள்

போலீசார் அதிரடி: விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளை கும்பல் கைது

Published On 2023-01-20 07:22 GMT   |   Update On 2023-01-20 07:22 GMT
  • விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர்.
  • சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், முகையூர், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய்கொண்டுள்ளது. இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டது. இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போன இடங்களை சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து எந்தெந்த செல்போன் எண்கள் அப்பகுதிகளில் வந்து சென்றன என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தனிப்படைக்கு தெரி யவந்தது. சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

அதன்படி காணை அடுத்துள்ள சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை ேபாலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்று சென்னையில் விற்பதாகவும், இது கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தபடும் என்று தெரியவந்தது. மேலும், பிடிபட்ட வாலிபர்கள் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாவர். இவர்களும் போதைப் பொருட்களை உட்கொண்ட பிறகே அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். இந்த 4 வாலிபர்களும் ஒன்றினைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 11 ்அதிவேக மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொள்ளைக்கும்பலிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News