உள்ளூர் செய்திகள்
புவனகிரி அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது
- சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார்.
- 4 மாத கர்ப்பமான பெண் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.
கடலூர்:
புவனகிரி அருகே உள்ள மருதூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண் உதவியாக இருந்து வந்துள்ளார். இதை பயன்படுத்திய சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனால் அந்த பெண் 4 மாத கர்ப்பமானார். புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.