உள்ளூர் செய்திகள்

கோவையில் பிளஸ்-2 மாணவி, 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி

Published On 2022-06-21 09:44 GMT   |   Update On 2022-06-21 09:44 GMT
  • கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
  • வீட்டில் தனி யாக இரு ந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

கோவை:

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் வேலு (வயது15). இவர் கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வேலு 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த வேலு சாணிப்பவுடர் மற்றும் அரளி விதையை அைரத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு வேலுவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி யில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இந்த முடிவில் பிரியதர்ஷினி எதிர்பா ர்த்தபடி அவருக்கு மதி ப்பெண்கள் கிடைக்கவி ல்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்ப ட்டார்.

வீட்டில் தனி யாக இரு ந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணி ப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக பிரியதர்ஷினியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News