உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்ப்பதை படத்தில் காணலாம்.

பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 92.82 சதவீதம் தேர்ச்சி.

Published On 2022-06-20 09:15 GMT   |   Update On 2022-06-20 09:15 GMT
  • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 92.82 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
  • கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடலூர்:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.

கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.

Tags:    

Similar News