உள்ளூர் செய்திகள்

பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள்- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.25 சதவீத தேர்ச்சி

Published On 2022-06-27 11:24 GMT   |   Update On 2022-06-27 11:24 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13602 பேர் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
  • மாணவர்களை விட மாணவிகள் 12.24 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம்:

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மே 2022ல் நடைபெற்ற 11ம்வகுப்பு பொதுத்தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6730 மாணவர்களும், 6872 மாணவிகளும் என மொத்தம் 13602 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

பொதுப் பாடத் தேர்வில் 13070 மாணவ, மாணவிகளும், தொழில் பாடப்பிரிவில் 532 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

இதில், 12004 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சராசரியாக 88.25 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.07, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.31 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 12.24 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாண்டு மாவட்டத்தின் தரம் 24வது இடத்தில் உள்ளது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News