உள்ளூர் செய்திகள்

மாரியப்ப பாண்டியன் தலைமையில் மனு கொடுத்த கிராம மக்கள்.

மானூர் அருகே இலவச பட்டாவில் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

Published On 2023-06-08 09:01 GMT   |   Update On 2023-06-08 09:01 GMT
  • கடந்த 2003 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 110 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
  • அந்த பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக தெரிகிறது.

நெல்லை:

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மானூர் லெட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு ஒரு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மானூர் லெட்சுமியாபுரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலமாக கடந்த 2003 மற்றும் 2012-ம் ஆண்டு களில் எட்டான் குளம், மானூர் வடக்குத் தெரு கரையிருப்பை சேர்ந்த 110 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் சிலர் வீடு கட்டி மின் இணைப்பு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாற்றம் செய்து குடியிருந்து வருகின்றனர். ஒரு சிலர் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தாசில்தார் மற்றும் சில அதிகாரிகள் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பட்டா இடத்தை அகற்றி வருகிறார்கள்.

மேலும் இந்த பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் நாங்கள் வீடு கட்டி குடியிருக்க அரசும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News