உள்ளூர் செய்திகள்

இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

Published On 2023-01-21 14:08 IST   |   Update On 2023-01-21 14:08:00 IST
  • வாகன சோதனையில் சிக்கினார்
  • திருச்சி சிறையில் அடைப்பு

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் பாலாஜி(வயது 22). இவர் கடந்த ஆண்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தான் வேலைபார்க்கும் ஒரு தனியார் கம்பெனியின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், குற்றபிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளை ஓட்டிசென்ற புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீழக்காடு, காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் ஒயிட் என்கிற வெள்ளைச்சாமி(29) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். மேலும் அவரிடம் வாகனம் சம்மந்தமான எவ்வித சான்றிதழ்களும் இல்லாதிருந்ததும், திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்ததும் தெரியவந்தது. உடனே வெள்ளைசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைதான வெள்ளைசாமி பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News