உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

Published On 2023-08-26 12:21 IST   |   Update On 2023-08-26 12:21:00 IST
  • பெரம்பலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது
  • பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது

பெரம்பலூர்,

தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் இன்று  நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 3 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களுக்கான தேர்வுகள் பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 6 தேர்வு மையங்களில், 158 அறைகளில் தேர்வுகள் நடைபெற்றது. 

Tags:    

Similar News