உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-11 13:42 IST   |   Update On 2023-07-11 13:42:00 IST
  • பெரம்பலூரில் சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தேர்தல் வாக்குறுதி 313-ன்படி முறையான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் தமிழக அரசு வழங்கிட வேண்டும். சமூக நலத்துறை அமைச்சர் உண்ணாவிரத கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரத்தை வழங்கிட வேண்டும். டேட்டா சென்டர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட சமூக நலத்துறை நிர்வாகங்கள் பொது வைப்பு நிதி பெறுவதற்கு மூத்த குடிமக்களை வதைக்கக்கூடாது. முன்னாள் சமூக நல இயக்குனர் ஆப்ரஹாம் உத்தரவின்படி ஓய்வு கால பலன்களை ஓய்வு பெறும் அன்றே முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சின்னதுரை வரவேற்றார். முடிவில் பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News