பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் நாளை ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம்
- சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மாற்றம்
- போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி தகவல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள சிறுவாச்சூர் கிரா–மத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு 21 வருடங்களுக்கு பிறகு நாளை (5-ந்தேதி) மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழா வில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.எனவே மக்களின் பயன் பாட்டிற்காகவும், போக்குவரத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி–சென்னை நெடுஞ்சாலையில் உள்ள காரை பிரிவு ரோட்டில் இருந்து வலது புறமாக திரும்பி அரியலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்ல வேண்டும்.சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம் பலூர் 4 ரோட்டில் இருந்து இடது புறமாக திரும்பி அரியலூர் வழியாக திருச்சி செல்லுமாறும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவிற்காக திருச்சி மற்றும் தென் மாவட்டங் களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிறுவாச்சூர் கிராமத்திற்கு முன்பு உள்ள ஆல்மைட்டி மெட்ரிகுலேசன் பள்ளி அருகில் வாகனங்களை நிறுத்தவும்,துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் வாகனங்கள் புதுவேலூர் சாலையிலுள்ள ரஞ்சனி காமராஜ் திருமண மண்டபம் அருகிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் ராம் இன் பெட்ரோல் பங்கிற்கு எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்மீடியனில் வலது புறமாக திரும்பி வலது புறமுள்ள கிராமசாலையில் இருந்து விளாமுத்தூர் சாலை மற்றும் நொச்சியம் சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார் பாக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.