உள்ளூர் செய்திகள்

தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-30 15:25 IST   |   Update On 2022-07-30 15:25:00 IST
  • தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • 2 அக்காள்களுடன் அமுதன் வசித்து வந்தாா்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் அமுதன் (வயது 24). காமராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து தனது தாய் சுசிலா, 2 அக்காள்களுடன் அமுதன் வசித்து வந்தாா். மேலும் அவர் தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். சம்பவத்தன்று வார விடுமுறையில் வீட்டில் இருந்த அமுதன் இரவில் அறைக்கு தூங்கச்சென்றார். இந்நிலையில் நேற்று காலை அறையில் அமுதன் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News