உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2023-06-22 13:05 IST   |   Update On 2023-06-22 13:05:00 IST
  • மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்
  • புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள ஒகளூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி செல்லம்மாள். கட்டிட தொழிலாளியான இவர் ஒகளூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக அங்கனூர் கிராமத்தை சேர்ந்த மணவழகன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்லம்மாள் மீது மோதியது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News