உள்ளூர் செய்திகள்

மின்வேலியில் சிக்கி பெண் பலி

Published On 2022-09-30 07:32 GMT   |   Update On 2022-09-30 07:32 GMT
  • மின்வேலியில் சிக்கி பெண் பலியானார்.
  • காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்டது

பெரம்பலூர்:

சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சத்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் அவரது வயலுக்கு அருகே உள்ள வயலில் உள்ள மின்வேலியில் சிக்கி சத்யா இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விவசாயி ராமசாமி என்பவர் தனது மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகளின் தொல்லையை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சத்யா சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News