உள்ளூர் செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-07-01 12:12 IST   |   Update On 2023-07-01 12:12:00 IST
  • பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
  • இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரையை அடுத்துள்ள சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 33). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) அவர் குடித்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News