உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் சீனிவாசன் கலை - அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

Published On 2023-07-08 12:46 IST   |   Update On 2023-07-08 12:46:00 IST
  • பெரம்பலூர் சீனிவாசன் கலை - அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது
  • வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று விழாவினைத் துவக்கி வைத்து பேசினார்.

பெரம்பலூர்,

சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று விழாவினைத் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, " இந்த கல்வி நிறுவனமானது உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ளும் சிறந்த களமாக அமையும். கல்வி மட்டும் கற்று தருவதோடு அல்லாமல் மாணவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து தகுதிகளை வளர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்புக்களை அள்ளித் தரும் தளமாக இருக்கும்.

வாழ்க்கையின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் வரையறத்து அதை அடைவதற்கான குறிக்கோளோடு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். படைப்பாற்றல் மிக்கவர்களாக விளங்க வேண்டும்" என்று தெரிவித்தார். விழாவில், சிறப்பு விருந்தினர் திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் சா.நீலகண்டன், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன், தன்னாட்சி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கல்லூரியின் சிறப்புகளை பற்றி பேசினர்.

முன்னதாக சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்வி முதன்மையர் பேரா.வ.சந்திர சௌத்ரி வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பெ. செந்தில்நாதன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News