உள்ளூர் செய்திகள்

வி.சி.க. கொடி கம்பம் சேதம் -10 பேர் கைது

Published On 2022-12-27 13:52 IST   |   Update On 2022-12-27 13:52:00 IST
  • வி.சி.க. கொடி கம்பத்தை சேதம் செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • கட்சியின் சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டதாக, அக்கட்சியின் சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த 30 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதில் 10 பேரை கைது செய்தனர்.


Tags:    

Similar News