உள்ளூர் செய்திகள்

வரலட்சுமி விரத பூஜையையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு

Published On 2022-08-06 10:05 GMT   |   Update On 2022-08-06 10:05 GMT
  • வரலட்சுமி விரத பூஜையையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
  • ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் ஜெய்ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. இதில் வரலட்சுமி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு அர்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. சுமங்கலி பெண்கள் தமது கைகளில் மஞ்சள் சரடு கட்டி வரலட்சுமி விரதபூஜையை நடத்தினர். அப்போது உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும் வேண்டி லட்சுமி தோத்திரங்ளையும், லலிதா சகஸ்ர நாமத்தையும் பாராயணம் செய்தனர்.     

Tags:    

Similar News