உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்ைட உடைத்து ரூ.7 லட்சம் நகை கொள்ளை

Published On 2022-12-23 14:46 IST   |   Update On 2022-12-23 14:46:00 IST
  • பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் திருட்டு போனது
  • பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள நேரு நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். மனைவி அமுதா (வயது 39), இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் தன் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டு, பகல் 12 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News