உள்ளூர் செய்திகள்
- மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 41). இவரது மனைவி பிரபாவதி (35). இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று கோவிந்தசாமி தனது மனைவியை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரபாவதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ேகாவிந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."