உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

Published On 2022-09-03 09:29 GMT   |   Update On 2022-09-03 09:29 GMT
  • வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
  • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கீழ்கோடி தெருவை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன்கள் திருவேங்கடம் (வயது 46), வினோத். விவசாயியான இவர்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

திருவேங்கடம் மற்றும் வினாத் இருவரும் நேற்று வயலில் வேலை பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டனர். விஜயா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபவர்களின் தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News