உள்ளூர் செய்திகள்

தூக்கில் தொழிலாளி பிணம்

Published On 2022-11-07 14:53 IST   |   Update On 2022-11-07 15:25:00 IST
  • தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார்
  • குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வடக்கலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (வயது28) இவரது மனைவி பவானி. இவருக்கு திருமணம் மாகி ஒரு வருடம் ஆகின்றன. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் செந்தில் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துசெந்திலை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிடடிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பார என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News