உள்ளூர் செய்திகள்

டயர் வெடித்து பள்ளத்தில் இறங்கிய பஸ்

Published On 2023-02-05 12:47 IST   |   Update On 2023-02-05 12:47:00 IST
  • அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
  • போலீசார் விசாரணை

அகரம்சீகூர்,

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட சின்னாறு பேருந்து நிறுத்தம் அருகே, தனியார் பேருந்தின் வலது பக்க டயர் வெடித்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு பள்ளத்தில் இறங்கியது. இச்சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News