உள்ளூர் செய்திகள்

வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-07-09 11:47 IST   |   Update On 2023-07-09 11:47:00 IST
  • வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
  • இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமியின் மகன் வெங்கடேசன்(வயது 35). இவர் தனது வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 1-ந் தேதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News