உள்ளூர் செய்திகள்

தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

Published On 2023-03-16 13:39 IST   |   Update On 2023-03-16 13:39:00 IST
  • தமிழ்வளர்ச்சித்துறை அலுவலகத்தில் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
  • முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை (வயது) முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணியாற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.in இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள்ளும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்க பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, என்று அந்தந்த மாவட்ட 

Tags:    

Similar News