உள்ளூர் செய்திகள்

லாரியில் திடீர் தீ...

Published On 2023-01-21 13:32 IST   |   Update On 2023-01-21 13:32:00 IST
  • டிரைவர் குதித்து உயிர் தப்பினார்
  • ரூ.6 லட்சம் மதிப்பிலான மீன்கள் வீண்

பெரம்பலுார், 

கடலுாரை சேர்ந்த சன்னகேசவன் என்பவர் லாரி தொழில் செய்து வருகிறார். இவரிடம் லாரி டிரைவராக கடலுார் குறிச்சிப்பாடியை சேர்ந்த செல்வகுமார்(வயது 46) வேலை செய்து வருகிறார். கடலுாரில் 4 டன் மீன்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரியை செல்வகுமார் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் சன்னகேசவனும் லாரியில் வந்துள்ளார். மீன் லோடு குறித்த நேரத்தில் சென்று கேரளாவில் சேர்க்க வேண்டும் என்பதால் லாரியை அதிவேகத்தில் செல்வகுமார் ஓட்டி சென்றுள்ளார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர் விரைந்து லாரியை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்த போது பாடாலுார் அருகே திடீர் என்று லாரி என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.

அடுத்த சில நொடிகளில் தீ மளமளவென லாரி கேபினில் பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் உயிர் தப்ப அவர் குதித்து ஓடி உள்ளார்.லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரிவது குறித்து தகவல் அறிந்த பாடாலுார் போலீசார் அங்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் பெரம்பலுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.லாரி தீவிபத்தின் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இது குறித்து பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே பலமுறை கேரளாவிற்கு சென்று வந்த லாரி ெதாடர்ந்து இயக்கப்பட்டதாலும், அதிவேகத்தாலும் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக லாரியில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான மீன்கள் கேரளாவிற்கு குறித்த நேரத்தில் சென்று சேராததால், அனைத்தும் வீணாகும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News