உள்ளூர் செய்திகள்

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-05-01 11:42 IST   |   Update On 2023-05-01 11:42:00 IST
  • மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமம் 3-வது வார்டு, காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் நந்தினி(வயது 16). தமிழ்ச்செல்வி எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி, எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மணிகண்டன், தமிழ்ச்செல்வி வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் 1.45 மணியளவில் வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் நந்தினி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News