உள்ளூர் செய்திகள்

ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்

Published On 2022-10-11 14:38 IST   |   Update On 2022-10-11 14:38:00 IST
  • ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்
  • தீபாவளி போனஸ் வழங்க கோரி

பெரம்பலூர்:

தீபாவளி போனஸ், மாத சம்பளம் , நிலுவைத் தொகையை உடனே தரக் கோரி பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து இன்று ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் இன்று காலை தங்களுக்கு மாத சம்பளம், தீபாவளி போனஸ் மற்றும் இபிஎப் நிலுவைத் தொகை தராததை கண்டித்து ெபரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில்உள்ள அரியலூர் பஸ் நிறுத்தம் எதிரில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News