உள்ளூர் செய்திகள்

கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2022-11-17 08:12 GMT   |   Update On 2022-11-17 08:12 GMT
  • கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பெரம்பலூர்

கால பைரவாஷ்டமியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் உள்ள மூலவர் பைரவருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு இரவு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு மாலையில் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Tags:    

Similar News