உள்ளூர் செய்திகள்

சிறப்பு மனு விசாரணை முகாம்

Published On 2023-07-13 13:56 IST   |   Update On 2023-07-13 13:56:00 IST
  • போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது.
  • 32 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு

பெரம்பலூர், 

பெரம்பலூர் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், வேலுமணி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 32 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News