உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் சிறப்பு மனு முகாம்

Published On 2023-05-25 10:41 IST   |   Update On 2023-05-25 10:41:00 IST
  • சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
  • போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு மனு முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்கள் பெற்றப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News