உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டு

Published On 2022-06-26 08:09 GMT   |   Update On 2022-06-26 08:09 GMT
  • அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
  • 14 பவுன் நகை திருடு போய் இருப்பது தெரியவந்தது.

பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே 2 இடங்களில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே. புதூர் கிராமம், நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி ஜெயமணி. காலை வீட்டை பூட்டிவிட்டு பாண்டியனும், ஜெயமணியும் கூலி ஆட்களை அழைத்துக் கொண்டு வயலில் சின்ன வெங்காய நடவு பணிக்காக சென்றுவிட்டனர்.

மதியம் வீட்டிற்கு வந்த ஜெயமணி வீட்டின் கதவு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வயலில் உள்ள கணவரை வீட்டுக்கு அழைத்து வந்து பார்த்த பொழுது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 14 பவுன் நகை திருடு போய் இருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கைரேகை நிபுணர்களடன் சம்பவஇடத்திற்கு சென்று பார்வையிட்டு கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் கே.கே நகரை சேர்ந்தவர் சிவா(வயது27). இவர் நாரணமங்கலத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார், காலையில் சிவா தனது மனைவி அழகுராணியுடன் காய்கறி வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை வீட்டின் மாடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது டேபிள் மேல் வைத்திருந்த 2 பவுன் செயின், அரை பவுன் மோதிம், ஒரு செல்போன் ஆகியவை காணமல் போனது தெரியவந்தது.

அவரது வீட்டின் அருகில் சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது இரண்டு பெண்கள் வந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த இரண்டு பெண்கள் அந்த தெருவில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News