பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஒட்டு மொத்தமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்களை அவமா னப்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையே தேவையில்லாத ஒன்று என பேசியதை வன்னையாக கண்டி க்கின்றோம்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவத்தார். இதில் ஜெயராமனை கண்டித்து கோஷ மிட்டனர். ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய பணிமேற்பா ர்வையாளர் தண்டபாணி நன்றி கூறினார்.